tag:blogger.com,1999:blog-2699266697242952632024-03-19T03:29:07.921-07:00VETHATHIRI MAHARISHIvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.comBlogger188125tag:blogger.com,1999:blog-269926669724295263.post-46567788761139207252008-11-17T03:01:00.000-08:002010-02-12T00:38:40.534-08:00இறைவணக்கம் குருவணக்கம்<div align="center"><span style="color: rgb(51, 204, 255);"><span style="color: rgb(0, 0, 0);">வாழ்க வையகம் குருவே அருள் வாழ்க வளமுடன்</span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8478KqNEpOCS70rkCRVBseXzSvDdr7Zf2M6T4ryd6YRsmlyy82znJSzcVnWAU_Tsr_K0eRmAEQxanIsMuVpoVrNIJ6KVaHIFNIpHhsOP4QcS9F-3oHcUvlOhiDpIuiSGjIXuqys5clb0/s1600-h/7.JPG"><img style="margin: 0px auto 10px; text-align: center; width: 400px; display: block; height: 300px;" id="BLOGGER_PHOTO_ID_5417176693535251122" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8478KqNEpOCS70rkCRVBseXzSvDdr7Zf2M6T4ryd6YRsmlyy82znJSzcVnWAU_Tsr_K0eRmAEQxanIsMuVpoVrNIJ6KVaHIFNIpHhsOP4QcS9F-3oHcUvlOhiDpIuiSGjIXuqys5clb0/s400/7.JPG" border="0" /></a><br /><span style="color: rgb(204, 0, 0);">இறைவணக்கம்</span></span><span style="color: rgb(51, 204, 255);"><span style="color: rgb(204, 204, 204);font-family:times new roman;" ><br /><br /><span style="color: rgb(0, 51, 51);">ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று</span><br /><span style="color: rgb(0, 51, 51);">அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி</span><br /><span style="color: rgb(0, 51, 51);">மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக்கேற்ப</span><br /><span style="color: rgb(0, 51, 51);">மூலகங்கள் பலவாகி அவையி ணைந்து</span><br /><span style="color: rgb(0, 51, 51);">பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்</span><br /><span style="color: rgb(0, 51, 51);">பிறப்பு இறப்பிடைஉணர்த லியக்கமாகி</span><br /><span style="color: rgb(0, 51, 51);">நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்</span><br /><span style="color: rgb(0, 51, 51);">நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.<br /><br /></span></span></span><span style="color: rgb(51, 204, 255);"><span style="color: rgb(255, 0, 0);">குருவணக்கம்</span></span><span style="color: rgb(51, 204, 255);"><span style="color: rgb(51, 204, 255);"><span style="color: rgb(204, 204, 204);"><br /><br /><span style="color: rgb(0, 51, 51);">சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற</span><br /><span style="color: rgb(0, 51, 51);">சீரறிய செய்த குருவே!</span><br /><span style="color: rgb(0, 51, 51);">அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப் பெரும்</span><br /><span style="color: rgb(0, 51, 51);">ஆனந்தம் பொங்குதங்கே!</span><br /><span style="color: rgb(0, 51, 51);">இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்</span><br /><span style="color: rgb(0, 51, 51);">இறுதிப் பயனாகிய</span><br /><span style="color: rgb(0, 51, 51);">சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்</span><br /><span style="color: rgb(0, 51, 51);">சந்தோஷ செய்தி இதுவே.</span></span></span></span><br /><span style="color: rgb(51, 204, 255);"><br /></span></div>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-68529137012409758252008-09-16T05:34:00.000-07:002010-02-11T23:30:52.014-08:00அமைதியான வாழ்வுக்கு மனவளக்கலை<div align="justify">நாம் வாழும் உலகில் விஞ்ஞானம் மென்மேலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவுக்கு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை (வசதி) பொருட்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் குழப்பமும், சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் குடும்ப வாழ்வில் அச்சமும், குழப்பமும் சூழ்ந்திருக்கிறது. </div><div align="justify"><br />இந்த குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை நெறியும்தான் தனிமனிதனையும் மனிதகுலத்தையும் குடும்பத்தையும் காக்கவல்லது. உயிரின் மதிப்புணர்ந்து மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத் தன்செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க தெளிவும் பயிற்சியும் பழக்கமும் மனவளக்கலை என்றபோதனை கலந்த சாதனைகளால் தான் கிட்டும். </div><div align="justify"><br />செய்த தவறுகளே துன்பமாக முளைக்கின்றன. இது முதலில் தெரியும் போது இனிமேல் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வருகின்றது தவறிழைப்பது மனம். இனி தவறு செய்துவிடக்கூடாது என தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. </div><div align="justify"><br />மனத்தின் உயர்வு எதுவோ அதுவே மனிதனின் உயர்வு. ஆகவே மனத்தை எந்த அளவில் உயர்த்திக் கொள்கிறமோ, தெளிவுபடுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிலே தான் மனிதனுடைய வாழ்வும் குடும்பத்தின் நலனும் உயரும். </div><div align="justify"><br />மனவளக்கலையின் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி விவரம்-<br />1, உடலை பாதுகாக்க - எளியமுறை உடற்பயிற்சி<br />2, மனதை வளப்படுத்த- எளியமுறைதியானப்பயிற்சி<br />3, உயிரை நீண்ட ஆயுளாக்க- காயகல்பப்பயிற்சி<br />4, குணத்தை மேம்படுத்த- தற்சோதனைப்பயிற்சி </div><div align="justify"><br />இப்பயிற்சிகள் மூலம் தனி மனிதன் நிறைவு, அமைதி பெற்று அவர்களைச்சார்ந்த குடும்பமும் அமைதி, மகிழ்வு, வெற்றி, நிறைவு பெறுகின்றன. குடும்பத்திற்கு ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும் அதனை தடுத்துக்கொண்டிருக்கும் துன்பங்கள், சிக்கல் இவற்றை குறைப்பதற்கும் ஒரு செயல் பயிற்சியாகும்.</div>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-269926669724295263.post-24027384438786865002008-09-15T04:02:00.000-07:002010-02-14T02:22:20.169-08:00உயிராற்றல் பெருக எளிய முறை காயகல்ப பயிற்சி<div align="left"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQXwS8AFzDH9ocdWViajdL_15vhncH9XPd8t4ZKvgoPzOP1KCMrokrtnjqW7lEqYla4tv7ARbnCjww5KFfPW6UIRRdG-9RTfoPgd0OK0l7PgSLM_bHJ0LorsPyiUQN-iJOJkbmCBvtAWM/s1600-h/Kayakalpam1.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; DISPLAY: block" id="BLOGGER_PHOTO_ID_5244769038996036530" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQXwS8AFzDH9ocdWViajdL_15vhncH9XPd8t4ZKvgoPzOP1KCMrokrtnjqW7lEqYla4tv7ARbnCjww5KFfPW6UIRRdG-9RTfoPgd0OK0l7PgSLM_bHJ0LorsPyiUQN-iJOJkbmCBvtAWM/s400/Kayakalpam1.jpg" /></a><br />மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.<br />1. ரசம்<br />2. ரத்தம்<br />3. சதை<br />4. கொழுப்பு 5. எலும்பு<br />6. மஜ்ஜை மற்றும்<br />7. சுக்கிலம்<br /><br />என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.<br /><br />உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.<br /><br />இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.<br /><br />நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.<br /><br />உதாரணமாக<br /><br />உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்<br />கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்<br />விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்<br />அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!<br /><br />காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.<br /><br />சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து ‘மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி’ என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.<br /><br />இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.<br /><br />திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.<br />1.<br /><br />ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்<br />அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்<br />காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்<br />கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்<br />மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்<br />மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்<br />தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்<br />தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா<br /><br />2.<br /><br />கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.<br />காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்<br />நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு<br />நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்<br />இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை<br />இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை<br />மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.<br />மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!<br /><br />காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.<br /><br />சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.<br />காயகற்பப் பயிற்சி பயன்கள்<br /><br />1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.<br />2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.<br />3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.<br />4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.<br />5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.<br />6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.<br />7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.<br /><br />இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம். </div>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-84265455813854333752008-09-15T04:00:00.000-07:002010-02-14T02:23:47.501-08:00அகத்தாய்வுப் பயிற்சிகள்<div align="left">தவத்தால் மனஅமைதியும், இறைநிலையே தானுமாகவும், தன்னுடன் வாழும் மனிதர்களாகவும் பிற உயிரினங்களாகவும் சடப்பொருட்களாகவும் இருப்பதை உணர்ந்து தெளிந்த நிலை உண்டாகிறது. யாரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், துன்பப்படுபவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அன்பும், கருணையும் உள்ளத்தில் உருவாகிறது.<br /><br />தவத்தின் பயனால் இந்த விளக்கங்களை மனிதன் பெற்றாலும், விளங்கிய வழி வாழ முடியாமல் தத்தளிக்கின்றான். இதற்குக் காரணம் பலப்பல பிறவித் தொடர்களாக மனிதன் உணர்ச்சிவய நிலையிலிருந்து புலன் வழி பெற்ற பழக்கப்பதிவுகளே ஆகும். இப்பழக்கப் பதிவுகளிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொண்டு விளக்க வழியில் தான் உணர்ந்தவாறு தனக்கும் பிறருக்கும் நன்மையே செய்து வாழும் நிலை வேண்டுமென்றால், அதற்கும் முறையான பயிற்சி தேவைப்படுகிறது.<br /><br />தன்னிடம் உள்ள குறைகளை போக்கிக் கொண்டு, பிறருக்கும் நன்மையே செய்யும் அறவழி வாழ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளே அகத்தாய்வு பயிற்சிகளாகும்.<br /><br />அகத்தாய்வு பயிற்சிகளில்<br /><br />எண்ணம் ஆராய்தல்<br />ஆசை சீரமைத்தல்<br />சினம் தவிர்த்தல்<br />கவலை ஒழித்தல்<br />நான் யார்?<br />என்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதன்படி வாழும்பொழுது குணநலப்பேறு என்ற சிறந்த பண்பினை ஒவ்வொருவரும் அடைய முடியும்.<br /><br />நம்மிடம் உள்ள தீய வினைப் பதிவுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு வேண்டாத குணங்கள் உள்ளன. அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகும்.<br /><br />அகத்தாய்வு பயிற்சிகள் மூலம் :<br /><br />பேராசையை – நிறைமனமாகவும்<br />சினத்தை – சகிப்புத்தன்மையாகவும்<br />கடும் பற்றினை – ஈகையாகவும்<br />முறையற்ற பால் கவர்ச்சியை – கற்பாகவும்<br />உயர்வு தாழ்வு மனப்பான்மையை – சமநோக்காகவும்<br />வஞ்சத்தை – மன்னிப்பு ஆகவும்<br /><br />மாற்றி மனிதநேயம் மலர்ந்து எல்லோரோடும் இணக்கமாக வாழலாம்.<br /><br />சமுதாயத்திலே நாம் வாழும்போது பிறருடன் தொடர்பு கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இனிமையாக அமையும் அளவில்தான் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிலவும். அந்த இனிமையான உறவு அமைய பிறரை வாழ்த்துகின்ற பழக்கம் அவசியம். அந்த வகையில்தான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தாரக மந்திரமாக வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தும் முறையை தந்துள்ளார்கள்.<br /><br />அமைதியான மனநிலையில் பிறரை வாழ்த்தும் போது எல்லோரோடும் இணக்கமான உறவு ஏற்படும். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கூட மனமாற்றம் பெற்று நண்பர்களாகி விடுவார்கள்.<br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/1.html">அகத்தாய்வு முதல்நிலை </a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/2.html">அகத்தாய்வு இரண்டாம்நிலை </a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_19.html">அகத்தாய்வு மூன்றாம்நிலை </a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_3980.html">அகத்தாய்வு நான்காம்நிலை<br /></a><br />– தத்துவஞானி ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி </div>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-269926669724295263.post-61436976159551261612008-09-15T03:59:00.000-07:002010-02-13T06:26:26.497-08:00வாழ்க்கை மலர்கள்<div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/duty-towards-world.html"><span style="color:#330033;">ஆளுமைத் திறன் (Personality skills) </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/duty-towards-world.html"><span style="color:#330033;">'வாழ்க வையகம்' (Duty towards World) </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/world-peace.html"><span style="color:#330033;">உலக அமைதி (World Peace) </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/fountain-of-divine-grace.html"><span style="color:#330033;">அருள் வெள்ளம் (Fountain of Divine Grace) </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/maneuvering-of-six-temp.html"><span style="color:#330033;">அறுகுணச் சீரமைப்பு (Maneuvering of six temp) </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_7778.html"><span style="color:#330033;">கவலை ஏன்? </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_1523.html"><span style="color:#330033;">வேதாந்தம் - சித்தாந்தம் </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_1523.html"><span style="color:#330033;">அறநெறியே இறைவழிபாடு</span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_08.html"><span style="color:#330033;">தெய்வீகத் திருநிதி </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_5036.html"><span style="color:#330033;">தொண்டாற்ற முனைந்து நில </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_7502.html"><span style="color:#330033;">த்வைதம், அத்வைதம், விசிஷ </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_6570.html"><span style="color:#330033;">பற்றறிவு, கற்றறிவு, </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_4838.html"><span style="color:#330033;">தவமும் அறமும் </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_3615.html"><span style="color:#330033;">கலாச்சாரம் </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_4913.html"><span style="color:#330033;">வினைப் பயன் </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post_08.html"><span style="color:#330033;">பொருளும் நிகழ்ச்சியும </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/blog-post.html"><span style="color:#330033;">உவமையின் எல்லை </span></a></div><div align="left"><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2007/12/welfare-of-mother-and-child.html"><span style="color:#330033;">தாய் சேய் நலம் (Welfare of Mother and Child)<br />சமபங்கு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_228.html"><span style="color:#330033;">திருவிளையாடல்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_8399.html"><span style="color:#330033;">சத் சங்கம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_4853.html"><span style="color:#330033;">மகா மறைபொருள்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_1076.html"><span style="color:#330033;">இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_7377.html"><span style="color:#330033;">குத்தி விளக்கிய அறிவு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_717.html"><span style="color:#330033;">முத்திறம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_4106.html"><span style="color:#330033;">மனமும் பிரம்மம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_2553.html"><span style="color:#330033;">தெய்வீகப் புதையல்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_9538.html"><span style="color:#330033;">பொருளும், மதிப்பும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_7891.html"><span style="color:#330033;">வாழ்க்கைத் தத்துவம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_447.html"><span style="color:#330033;">தெய்வீக நீதி</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_6781.html"><span style="color:#330033;">உன்னுள் நான்; என்னுள் நீ</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_8419.html"><span style="color:#330033;">கருவில் திரு உடையார்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_241.html"><span style="color:#330033;">மெய் வழி அறிவு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_5675.html"><span style="color:#330033;">குண்டலினி யோகம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_3095.html"><span style="color:#330033;">தன்னிறைவுத் திட்டம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_7768.html"><span style="color:#330033;">வேண்டியதெல்லாம் கிடைக்கும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_4226.html"><span style="color:#330033;">எண்ணப் பதிவு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/natural-instinct.html"><span style="color:#330033;">இயற்கை உணர்வு (Natural Instinct)</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_7556.html"><span style="color:#330033;">உடலோம்பல் இறைவழிபாடு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_277.html"><span style="color:#330033;">ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_5380.html"><span style="color:#330033;">மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_6402.html"><span style="color:#330033;">நான் யார்?</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_4714.html"><span style="color:#330033;">கோள்களும், ஜீவனும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_4191.html"><span style="color:#330033;">உன்னையே நீ அறிவாய்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/path-to-freedom.html"><span style="color:#330033;">விடுதலைக்கான வழி (The path to freedom)</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/equanimity.html"><span style="color:#330033;">சமநிலை (Equanimity)</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_3704.html"><span style="color:#330033;">உணவும், மருந்தும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_2566.html"><span style="color:#330033;">வேண்டல் வளம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_3180.html"><span style="color:#330033;">மிருகம், மனிதன், மாமனிதன்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_187.html"><span style="color:#330033;">ஆக்கினை</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_98.html"><span style="color:#330033;">கவலை ஒழித்தல்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_2037.html"><span style="color:#330033;">இறைவனின் நிழல்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_3215.html"><span style="color:#330033;">வினையும் பயனும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_704.html"><span style="color:#330033;">ஓர் உலகம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_6890.html"><span style="color:#330033;">இறைவனின் கருவி</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_131.html"><span style="color:#330033;">மெளன காலம்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_9723.html"><span style="color:#330033;">கர்ப்பகாலப் பொறுப்புகள்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_5789.html"><span style="color:#330033;">ஆன்மாவின் மூன்று நிலைகள்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_3726.html"><span style="color:#330033;">தாத்தாவும் பேரனும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_375.html"><span style="color:#330033;">மக்களின் அறிவு வளர்ச்சி</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_1463.html"><span style="color:#330033;">அலையின் தன்மை</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_5771.html"><span style="color:#330033;">உயிரும் மனமும்</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_651.html"><span style="color:#330033;">முயற்சியளவே ஞான விளைவு</span></a><br /><a href="http://mkgthavamaiyam.blogspot.com/2008/08/blog-post_639.html"><span style="color:#330033;">திறமை உயர்வு</span></a><span style="color:#33ccff;"><br /><br /></span></div><p align="left"><span style="color:#33ccff;"></span></p>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-70821061507659370392008-09-15T03:58:00.002-07:002010-02-11T23:30:51.372-08:00மனவளக்களை<a title="View தவமும் தத்துவமும் on Scribd" href="http://www.scribd.com/doc/17403217/-" style="margin: 12px auto 6px auto; font-family: Helvetica,Arial,Sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-size: 14px; line-height: normal; font-size-adjust: none; font-stretch: normal; -x-system-font: none; display: block; text-decoration: underline;">தவமும் தத்துவமும் </a> <object codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" id="doc_675838404982613" name="doc_675838404982613" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" align="middle" height="500" width="100%" > <param name="movie" value="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=17403217&access_key=key-9gmiv6fp7ausg0eaice&page=1&version=1&viewMode=list"> <param name="quality" value="high"> <param name="play" value="true"> <param name="loop" value="true"> <param name="scale" value="showall"> <param name="wmode" value="opaque"> <param name="devicefont" value="false"> <param name="bgcolor" value="#ffffff"> <param name="menu" value="true"> <param name="allowFullScreen" value="true"> <param name="allowScriptAccess" value="always"> <param name="salign" value=""> <param name="mode" value="list"> <embed src="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=17403217&access_key=key-9gmiv6fp7ausg0eaice&page=1&version=1&viewMode=list" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" play="true" loop="true" scale="showall" wmode="opaque" devicefont="false" bgcolor="#ffffff" name="doc_675838404982613_object" menu="true" allowfullscreen="true" allowscriptaccess="always" salign="" type="application/x-shockwave-flash" align="middle" mode="list" height="500" width="100%"></embed> </object>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-30879964285703746522008-09-15T03:58:00.000-07:002010-02-11T23:30:51.243-08:00வேதாத்திரியன் கிராவிட்டி<a title="View VETHATHIRI - வேதாத்திரியன் கிராவிட்டி on Scribd" href="http://www.scribd.com/doc/7677281/VETHATHIRI-" style="margin: 12px auto 6px auto; font-family: Helvetica,Arial,Sans-serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; font-size: 14px; line-height: normal; font-size-adjust: none; font-stretch: normal; -x-system-font: none; display: block; text-decoration: underline;">VETHATHIRI - வேதாத்திரியன் கிராவிட்டி</a> <object codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" id="doc_911420714306294" name="doc_911420714306294" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" align="middle" height="500" width="100%" > <param name="movie" value="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=7677281&access_key=key-fgh4lj7qek3a9x0skh6&page=1&version=1&viewMode=list"> <param name="quality" value="high"> <param name="play" value="true"> <param name="loop" value="true"> <param name="scale" value="showall"> <param name="wmode" value="opaque"> <param name="devicefont" value="false"> <param name="bgcolor" value="#ffffff"> <param name="menu" value="true"> <param name="allowFullScreen" value="true"> <param name="allowScriptAccess" value="always"> <param name="salign" value=""> <param name="mode" value="list"> <embed src="http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=7677281&access_key=key-fgh4lj7qek3a9x0skh6&page=1&version=1&viewMode=list" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" play="true" loop="true" scale="showall" wmode="opaque" devicefont="false" bgcolor="#ffffff" name="doc_911420714306294_object" menu="true" allowfullscreen="true" allowscriptaccess="always" salign="" type="application/x-shockwave-flash" align="middle" mode="list" height="500" width="100%"></embed> </object>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-77474112511569083882008-09-15T03:51:00.000-07:002010-02-11T23:30:51.269-08:00VETHATHIRI MAHARISHI<p style="visibility:visible;"><object data="http://widget-89.slide.com/widgets/slideticker.swf" width="600" style="width:600px;height:320px" height="320" type="application/x-shockwave-flash"><param value="http://widget-89.slide.com/widgets/slideticker.swf" name="movie"/><param value="high" name="quality"/><param value="noscale" name="scale"/><param value="l" name="salign"/><param value="transparent" name="wmode"/> <param value="cy=ms&il=1&channel=3098476543670251913&site=widget-89.slide.com" name="flashvars"/></object><p style="white-space:nowrap"><a href="http://www.slide.com/pivot?cy=ms&at=un&id=3098476543670251913&map=1" target="_blank"><img border="0" src="http://widget-89.slide.com/p1/3098476543670251913/ms_t056_v000_s0un_f00/images/xslide1.gif" ismap="ismap"/></a> <a href="http://www.slide.com/pivot?cy=ms&at=un&id=3098476543670251913&map=2" target="_blank"><img border="0" src="http://widget-89.slide.com/p2/3098476543670251913/ms_t056_v000_s0un_f00/images/xslide2.gif" ismap="ismap"/></a> <a href="http://www.slide.com/pivot?cy=ms&at=un&id=3098476543670251913&map=F" target="_blank"><img border="0" src="http://widget-89.slide.com/p4/3098476543670251913/ms_t056_v000_s0un_f00/images/xslide42.gif" ismap="ismap"/></a></p></p>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-23166400581087496772008-08-19T04:07:00.000-07:002010-02-11T23:30:52.723-08:00தவம் என்றால் என்ன ?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguvgHM_7hBphphxIFKeGzPy73lmr1_AwVqpaLIaM5swe-FbwRUbfX72iLslLGgcPT_7tk0rYJqvlOrumt30HHIc3VuuF3nI5RorhMyiyic4QG5rWLfBldsvyXHLcWL52HlpKQtuJZyHxg/s1600-h/veda1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5244610285162675458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguvgHM_7hBphphxIFKeGzPy73lmr1_AwVqpaLIaM5swe-FbwRUbfX72iLslLGgcPT_7tk0rYJqvlOrumt30HHIc3VuuF3nI5RorhMyiyic4QG5rWLfBldsvyXHLcWL52HlpKQtuJZyHxg/s400/veda1.jpg" border="0" /></a><br /><div align="center"><span style="font-family:times new roman;">நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள புறத்தையும் உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கான பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிதான் ‘தவம்’ . அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’ ஞானம் பெருகி அஞ்ஞானத்தின் அவலம் குறைகிறது. கானகம் சென்றுதான் ‘தவம்’ செய்யவேண்டுமா? வேண்டாம்! இல்லறத்திலிருந்தே ‘தவம்’ செய்யலாம் தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும். ஞானிகள்தான் ‘தவம்’ இயற்றவேண்டுமா? இல்லையில்லை! குடும்பத்தாறுக்கே தவமும், அகத்தாய்வும் (தற்சோதனை) மிகவும் அவசியம் மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன ஆழுக்கை நீக்கும் !<br />இரண்டையும் பெற அன்பர்களே வாரீர் ! ‘தத்துவம், விஞ்ஞானம், வாழ்க்கை நெறி ‘ இவை பற்றிய சிந்தனைத்தூண்டல் தான் மனவளக்கலை தவ மையங்கள், அறிவுத்திருக் கோயில்களில் தரப்படுகிறது.<br /><br />- மகரிஷி<br />வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம்</span></div>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-5263602628697559702008-08-19T02:19:00.000-07:002010-02-11T23:30:51.154-08:00தியானம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD6XGdZcuUXa3gNbIEIehvyhOs8lPbFoH3z88VMelCn9WCVBi2Ix90F-37Vwvfj3dlshmjxICkSFslFYV9zcPRj8rspbFgPT9rNPxmR4Osg1kLlf9abc4Cfi3GMFMe2IQuhFWv4mLLDeY/s1600-h/img4.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5241724568140119842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD6XGdZcuUXa3gNbIEIehvyhOs8lPbFoH3z88VMelCn9WCVBi2Ix90F-37Vwvfj3dlshmjxICkSFslFYV9zcPRj8rspbFgPT9rNPxmR4Osg1kLlf9abc4Cfi3GMFMe2IQuhFWv4mLLDeY/s400/img4.jpg" border="0" /></a><br /><span style="font-family:times new roman;">தியானம் ஆன்மீக வழிபாட்டின் உயர் மட்ட நிலையாகும். உலகியல் சிந்தனைகளில் ஈடுபட்டு காரணமின்றி மனம் அலையாய் அலைகிறது. உள்மனத்தில் ஒரு போராட்டமே நிகழ்கிறது. அந்த மனத்தின் அலைச்சுழலை ஒருநிலைப்படுத்தி இறை நிலையோடு அதை ஆழ்த்துவதே தியானம். மனவலிமை, மன அமைதி, மனநிறைவு, மனதில் ஒரு தெய்வீகத்தன்மை இழையோடும் ஆனந்தம், வெற்றிகளையும், தோல்விகளையும் சம்மாக பாவிக்கும் தன்மை, அனைத்தும் தியானத்தால் அடையும் நன்மைகள்! மன ஒருமைப்பாடு இல்லாதவன் எதிலும் வெற்றி கானவே இயலாது. நம்முள்ளேயே அறிவாக இருக்கும் இறைவனை அறிந்து கொள்ள தியானம் அடிப்படையாகும்.<br /><br /></span><span style="font-family:times new roman;"><span style="color:#cccccc;">"உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்<br />உடம்பினுள் உத்தமனைக் காண்க"<br /></span><br />என்பது ஔவையார் வாக்கு. இவ்வுடலைக் கொண்டுதான் ஆன்மாவை அறியலாம்! ஐம்புலன் அடக்கம், நம்முள் உள்ள தேவையில்லாததை நீக்குதல், தேவையேயில்லாத உடம்பின் சுகங்களுக்கு எல்லை கட்டுதல் தியானப் பயிற்சியில் நாம் பெறமுடியும்.<br />தியானம், (தவம்) செய்ய தயங்காதீர்கள்! எளிய முறையில் நிறைவான தியானம் செய்வதற்கு பழக்கும் நிலையம் தான் மனவளக்கலை மன்றங்கள்! அறிவுத்திருக்கோயில்ல்கள்! மகான் வேதாத்திரி மகரிஷியின் தத்துவ பயிற்சிகளே மனிதனை மாமனிதனாக மாற்றும் அன்பர்களே! மன்றத்திற்கு வாருங்கள்.<br /><br />வாழ்க வளமுடன். </span>vethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-74856573807839704172008-08-17T11:00:00.000-07:002010-02-11T23:30:52.035-08:00இறைவனின் கருவிஇறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம்-இறைவனுடைய கருவியாகவே இருக்கக் கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது.<br /><br />சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும். அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம்.<br /><br />ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்தத் தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இதுவரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-51901928878237924872008-08-17T10:59:00.000-07:002010-02-11T23:30:52.043-08:00மெளன காலம்மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.<br /><br />இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.<br /><br />ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.<br /><br />எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?<br /><br />நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.<br /><br />போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.<br /><br />அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-80330845004793276282008-08-17T10:57:00.000-07:002010-02-11T23:30:52.050-08:00கர்ப்பகாலப் பொறுப்புகள்குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.<br /><br />மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.<br /><br />நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-52465070751811338342008-08-17T10:56:00.000-07:002010-02-11T23:30:52.063-08:00ஆன்மாவின் மூன்று நிலைகள்காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.<br /><br />கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.<br /><br />சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.<br /><br />தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-26056931373110023772008-08-17T10:55:00.001-07:002010-02-11T23:30:52.082-08:00மக்களின் அறிவு வளர்ச்சிஅறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.<br /><br />யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.<br /><br />தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.<br /><br />இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-8532298664568728312008-08-17T10:55:00.000-07:002010-02-11T23:30:52.072-08:00தாத்தாவும் பேரனும்தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல்-விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.<br /><br />பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும், பேரனும் அதாவது இறைவெளியும், நிழல் விண்ணும் ஆடும் கூத்துத் தான் பிரபஞ்சம்.<br /><br />இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும், நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்துத் தானே இவையனைத்தும்!<br /><br />இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிறபோது அது அலை. அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.<br /><br />இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில் தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-10388608261692854022008-08-17T10:54:00.000-07:002010-02-11T23:30:52.095-08:00அலையின் தன்மைநமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.<br /><br />பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.<br /><br />அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-269926669724295263.post-77730817795723274352008-08-17T10:53:00.000-07:002010-02-11T23:30:52.103-08:00உயிரும் மனமும்உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.<br /><br />வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.<br /><br />இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.<br /><br />தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-30542423065201237622008-08-17T10:52:00.001-07:002010-02-11T23:30:52.122-08:00திறமை உயர்வுஏதோ ஒரு வகையிலோ, சில வகைகளிலோ, திறமைசாலியாக நீ இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம். உன் திறமைக்குக் கடந்த கால மனித இனத் தொடரும் இக்காலச் சமுதாயத் தொடரும் ஆதாரம் என்பதை மறந்துவிடாதே. இந்த உணர்வு உன் திறமைக்கு வீழ்ச்சி ஏற்படாது பாதுகாப்பளிக்கும். கடமையிலே உன்னை உயர்த்தும், உனது திறமையை மேலும் மேலும் அதிகரிக்கும்.<br /><br />ஒவ்வொரு துறையிலும் நீ அடைந்துள்ள உயர்வைவிட அதிகமான உயர்வை அடைந்துள்ளோர் பலர் இருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடாதே.<br /><br />சந்தர்ப்பம் கிடைக்கும்போது உன்னைவிடத் திறமைசாலிகளைப் பாராட்டுவதும் உன்போன்ற திறமையில் முன்னேற்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதும் உன் திறமைக்கோர் சிறப்பளிக்கும் சாதனமாகும்.<br /><br />சுயநல நோக்கத்தோடு பிறரைப் புகழ்வது கயமைச் செயல் என்பதையும் மறந்துவிடக் கூடாது.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-85536662962624849552008-08-17T10:52:00.000-07:002010-02-11T23:30:52.113-08:00முயற்சியளவே ஞான விளைவுவிதை, நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோலவே, ஒரு ஆசான் அத்துவிதத் தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உன்அறிவு என்னும் நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சி பெற, நீ ஒழுக்கம் என்ற உரம் இடவேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமைப் பழக்கமான தவமும் - ஆராய்ச்சியும் என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.<br /><br />அறிவை ஒன்றச் செய்து உறுதியான, அசைவற்ற நிலையடைவதே ஞானத்திற்குத் தேவையாக இருக்கிறது.<br /><br />ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயும் மாறாது பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.<br /><br />இவைகள் எல்லாம் அமையும் வகைக்கும் அளவிற்கும் ஏற்றபடி "ஞானம்" என்ற விளைவும் உனக்கு உண்டாகும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-66642264550913913262008-08-17T10:29:00.000-07:002010-02-11T23:30:52.131-08:00இறைநிலையுணர்ந்த அறிவுபேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனிதப் பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப் போற்றப்படுகிறது. அதுவே தான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.<br /><br />இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணு வெனும் நுண்ணியக்கத் துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்த பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், 'பிரம்மம்' எனும் தெய்வீகப் பேராற்றலின் சரித்திரம்<br /><br />மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவு தான் இறைநிலையுணர்ந்த அறிவு. அதுவே தான், முடிவு நிலையான மனத்தின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-49802865959415245002008-08-17T10:28:00.001-07:002010-02-11T23:30:52.148-08:00சமபங்குஎப்பொழுது யாராவது ஒருவர் ஏதாவது ஓரிடத்தில் உண்மைப் பொருளைப் பற்றியும், இயற்கை இரகசியங்களைப் பற்றியும் கண்டுபிடித்துச் சொல்வாரானால், அப்போது அது மனித இனத்தினுடைய முழு உரிமை ஆகிவிடுகிறது. அன்றி அது கண்டுபிடித்தவருடைய தனிப்பட்ட உரிமையாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சி நியதிப்படி பிறந்து, பொருள் வளத்திலே உயர்ந்து, சமூகத்தால் கல்வி அறிவு ஊட்டப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருவதால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் பணத்திற்காக, அல்லது அரசியல் செல்வாக்கிற்காக வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.<br /><br />இந்த இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கையைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நான் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவாறு விளக்கியிருக்கிறேன். மனித வள மேம்பாட்டுக்காக, காலத்திற்கேற்ற தேவையை உணர்ந்து, பேரறிவாகிய அந்த இயற்கை என்னும் பேராற்றலே யார் ஒருவர், தனது மன அலையை மிக நுண்ணிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கொள்கிறாரோ, அவர் மூலமாக உண்மைப் பொருளைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.<br /><br />ஆகவே, தத்துவ உண்மைகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இவை எவையானாலும் அவை இயற்கையெனும் பேராற்றலால் தகுதியான ஒரு நபர் மூலம் வெளிப்படுத்தப்பட்டவையேயாகும். தெரிந்து முயன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒன்றுமே இல்லை. எனவே, அவை அனைத்திலும் உலகில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் சமபங்கு உண்டு என்பது விளங்கும்.<br /><br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-83428846982630678892008-08-17T10:28:00.000-07:002010-02-11T23:30:52.139-08:00ஐந்திணைப்புப் பண்பாடுதற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றிச் சிந்தித்தல், தன் குறையுணர்தல், தான் திருத்தம் பெறத் திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனைப் பயிற்சியில் அடங்கும்.<br /><br />தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கிி ஒவ்வொன்றாகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. முதற் பயிற்சி 'நான் யார்?' என்ற வினாவினை எழுப்பி விடைபெறுதலாகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது. இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.<br /><br />இரண்டாவது பயிற்சி எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குபடுத்துவதாகும். தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.<br /><br />மூன்றாவது பயிற்சி அறுகுணச் சீரமைப்பு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும் நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு நற்குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுணச் சீரமைப்பாகும். மனிதன் உணர்ச்சி வயப்படும்போது தான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலை பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுணச் சீரமைப்பு இன்றியமையாததாகும்.<br /><br />நான்காவது பயிற்சி கவலை ஒழித்தல். அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும் கணிப்புத் தவறுகளும் ஏற்படுகின்றன. இவைகளையெல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லாக் கவலைகளையும் ஒழித்து நலம் பெறக் கவலையொழித்தல் என்ற பயிற்சி நன்கு உதவுகின்றது. குண்டலினி யோகத்தால் விாழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்துவிடும். எனவே, இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.<br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-21524816815276552642008-08-17T10:27:00.000-07:002010-02-11T23:30:52.157-08:00திருவிளையாடல்இயக்க மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கும் தூய இறைவெளிதான் இருப்பு மண்டலம். தூய வெளியெனும் பிரம்ம நிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால், எந்த ஒன்றையும், மற்ற ஒன்றிலிருந்து பிரிந்து போகாமல், சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும், ஒவ்வொரு வேதான் நுண்ணணுவும் தனது தற்சுழற்சி விரைவாலும், யோகான் எனும் நுண்ணணுவின் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் காந்த தன்மாற்ற அலைகளாலும், நுண் விண்களிடையே குறிப்பிட்ட அளவில் தொலைவு அமைந்திருக்கின்றது. அது காக்கவும் படுகின்றது.<br /><br />எனவே, நுண்ணணுவானாலும் சரி, அண்டங்கள் ஆயினும் சரி, அவற்றில் எழுந்து இயங்கும் அலையின் அழுத்தத்திற்கு மேலாக எதுவும் விலகிப் போகாமல் காப்பது சூழ்ந்தழுத்தம் அனைத்தியக்க அருட் பேராற்றலே. அதே போன்று எந்த நுண்ணணுவோ, அண்டங்களோ - அவற்றிலிருந்து வெளியாகும் அலைகளின் தள்ளும் ஆற்றலுக்கு மேல் விலகவும் முடியாது. இந்த நியதி தான் வான்காந்த ஆற்றலின் விளைவு.<br /><br />மேலும், நுண்ணணுக்களாகிய வேதான்கள் இடையிலும், கோள்களின் இடையிலும், கோள்களின் உட்புறம் உள்ள இறைவெளியிலும் கணக்கிட முடியாத அளவில் யோகான் நுண்ணணுக்கள் தோன்றிக் கொண்டேயும், அவை தன்மாற்றங்களை அடைந்து கொண்டேயும் இருக்கும் விந்தைகளே வான்காந்தம் எனும் மறைபொருள் பேரியக்க மண்டலத்தில் ஆற்றும் திருவிளையாடல்கள். இயற்கையின் இயல்பாக நடைபெறும் தெய்வீக நிகழ்ச்சிகளைத் திருவிளையாடல் என்று வழங்குகிறோம்.<br /><br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-269926669724295263.post-70982423764186591232008-08-17T10:26:00.000-07:002010-02-11T23:30:52.166-08:00சத் சங்கம்உங்கள் உள்ளங்களை விரித்து உலக நிலைமையை நோக்குங்கள். தனிமனிதன் வாழ்வில்படும் அல்லல்களையும், துன்பங்களையும் கூர்ந்து உணருங்கள். இவற்றிற்குக் காரணம் என்ன? இயற்கையில் எந்தக் குறையுமில்லை. மனிதன் அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் வாழ்வில் பல்வேறுபட்ட சிக்கல்களாக வடிவங் கொண்டுள்ளன.<br /><br />பொருள் துறையில் ஏற்றத்தாழ்வு, தனது ஆற்றலை உணராமலும் அதனைப் பெருக்கிக் கொள்ளாமலும் பிறரிடமிருந்தே எப்போதும் தன் விருப்பத்திற்கும், தேவைக்கும் நிறைவு பெற எதிர்பார்த்தல், இவற்றால் பொறாமை, புறங்கூறல், நல்லவையே செய்பவர்களிடம் கூடக் களங்கம் கற்பித்து மகிழ்தல், பிறர் கடமைகளில் குறுக்கிடல், தனது பெருமையை வளர்த்துக் கொள்ளப் பிறர் செயலை இழித்துக் கூறல், பிறர் பொருள் இன்பம் பறித்துத் தான் மகிழ நினைத்தல் இவையெல்லாம் தடுக்கமுடியாத அளவில் சமுதாயத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றன.<br /><br />இந்தச் சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலை மாறிச் சமுதாயம் தூய்மையும், வளமும், அமைதியும் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த நன்னோக்க முடையோர் ஒன்றிணையும் கூட்டமே சத்சங்கங்கள்.<br /><br /><br />-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிvethathriyamhttp://www.blogger.com/profile/05586862351834591096noreply@blogger.com0